an AuthorClick Here
Opportunity to increase your reader base and boost sales.
a ReaderClick Here
Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).
Opportunity to increase your reader base and boost sales.
Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).
Tamil
தமிழ்ச் சமூகத்திற்கு எனது முதற்கண் வணக்கம். நான் நமது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகிலுள்ள வட்டூர் என்ற ஊராட்சியில் பிறந்தவன். விவசாய குடும்பத்தினன். பிழைப்புக்காக எனது தந்தையோடு சேலத்தில் குடியேறினோம், இருப்பினும் எனது பூர்வீகமும் அங்குள்ள எனது சொந்தங்களும், வானம் பார்த்த மேட்டுக்காடு பூமியும் நிலையாக எங்களை வாழ வைத்து வருகிறது. நான் எனது குழந்தைப் பருவத்தில் எனது தாத்தா மாரப்ப *கவுண்டர் அவர்களோடு எனது குலசாமி சித்தளந்தூர் அம்மன் கோவிலுக்கும் (அம்மனோடு கன்னிமார்களும், ஐயனாரும் இடம் பெற்றிருக்கும்), புதுப்புளியம்பட்டி செல்லக் குமாரசாமி கோயிலுக்கும்(குமரனோடு குப்பியண்ணனும் இடம் பெற்றிருக்கும்), எங்களது ஊருக்கு அருகிலுள்ள அத்தாயி அம்மன் கோவிலுக்கும், முனியப்பன் கோவிலுக்கும் செல்வது உண்டு. அங்கெல்லாம் எனது பங்காளிகளும், மாமன்களுமே கோவிலில், நம் தாய்மொழியாம் தமிழிலேயே வேண்டி பூசை செய்யும் பூசாரியாகவும் உள்ளனர்.
Share with your friends: