an AuthorClick Here
Opportunity to increase your reader base and boost sales.
a ReaderClick Here
Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).
எழிலினி பதிப்பகம்
Poetry
9789392224652
ஈழத்தின் கலவர நிலைவரம் பற்றி... ’கொத்துக் குண்டின் வெளிச்சத்தில் பதுங்கு குழி போகும் முன்பு கண்முன்னே பல பிணங்கள் குவிந்திருக்கும்...’ -என்றெல்லாம் பிரபா, படம் பிடிக்கும் போது, நம் முதுக்குத்தண்டு சில்லிடுகிறது. மரணத்திற்கு நடுவே சிக்கியிருந்த ஈழத் தமிழர்களின் துயரம் நெஞ்சைக் கனமாக்கி ரணமாக்குகிறது. அதிலும் சோகத்தில் கொடிது புத்திர சோகம் என்பார்கள். அதன் ஒட்டுமொத்த படையெடுப்பையும் எதிர்கொண்டிருக்கிறது இவரின் இலக்கிய இதயம். ”என் மூன்று முத்துக்களே உயிர்குடிக்கும் எறிகணைக்கு உங்களை நான் பறிகொடுத்து
Share with your friends:
Let people know you are reading this book
About the Author: கவிதாயினி பிரபா அன்பு, அசாத்தியமாக வாழ்வை இலக்கியப்படுத்தும் கவிதைப் போராளி. வெறும் காகிதப் போராளியாக மட்டுமல்லாது; களப்போராளியாகவும் வாழ்வில் சுழன்றவர். இன அழிப்புப் சூறாவளியின் போது, உறவுகளையும் உடைமைகளையும் இழந்துவிட்டு, தனது பீனிக்ஸ் குணத்தால் தன்னைப் புனரமைத்துக் கொண்டு இயங்குகிறவர். கவிதை, பாடல், சிறுகதை என்று படைப்பின் பல தளங்களிலும் பயணிக்கிறவர். கொத்துக்குண்டுகளிடம் இருந்து தப்பிப் பிழைத்த தன் நாட்களை, சமூகத் தொண்டிற்காக ஒப்படைத்துக் கொண்டிருக்கும் இவர், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது மகிழவைக்கும் பெருமிதச் செய்தி. இணைய ஊடகத்திலும் தன் வியர்வையைப் பெருக்கியபடி, செயல் இலக்கியமாகவும் திகழ்கிறார் பிரபா. தனது காயங்களுக்கிடையில் பூத்த கவிதை மலர்களை எல்லாம் இந்த நூலில் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்..
Opportunity to increase your reader base and boost sales.
Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).